விபத்துக்குள்ளான சிறுமி தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மத்துகம நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்த் திசையில் இருந்து வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த சிறுமி, அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் தர்கா நகர அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிறுமி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் காயமடைந்த சிறுமியின் தந்தை மற்றும் தாய் மேலதிக சிகிச்சைக்காகத் தற்போது நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தின் பின்னர் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

0 Comments
tamil makal kural