முன்னாள் கடற்படைத் தளபதி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!

இலங்கை கடற்படையின் 14வது கடற்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற தயா சண்டகிரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இதன்போது முன்னாள் கடற்படைத் தளபதியின் கடல் மற்றும் கடற்படைத் துறையின் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகள் தொடர்பான ஆலோசகராக நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.





Post a Comment

0 Comments