மேலும் மூவர் சஜித்திற்கு ஆதரவு !

 


வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்றைய தினம்(04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இவர் வடமேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

வடமேல் மாகாண சபை கலைக்கப்படும் வரை அவர் அங்கு முதலமைச்சராக பதவி வகித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சமந்த பிரதீப் குமார, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்றைய தினம் (04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நேற்றைய தினம் அவர் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்றைய தினம் (04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.


Post a Comment

0 Comments