வெள்ளியன்று அனுட்டிக்கப்படும் ஹர்த்தால் கடையடைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு


28 07.2023 வெள்ளியன்று அனுட்டிக்கப்படும் பூரண ஹர்த்தால் கடையடைப்பு  போராட்டத்திற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவரால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின்  சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள மனிதப்புதைகுழிக்கு பக்கசார்பற்ற நீதிவிசாரணை கோரி நடாத்தப்படும் அனைத்து அற வழிப்போராட்டத்திற்கும் முயற்சிகளிற்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது 


'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாக

எமது அரசியல் கட்சி கருதுகின்றது"


இந்தவகையில்  வலிந்து  காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தின் நியாயத்தன்மையை எமது கட்சி உணர்ந்து மதிக்கின்றதுடன்  அதற்கு எமது முழு ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குகின்றது


வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வெற்றிபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் வினயமுடன் கேட்டுக் கொள்கின்றோம் 


இதனை ஏற்று அரசியல் கட்சிகள் மாணவர் அமைப்பினர்கள் தனியார் துறையினர்கள் போக்குவரத்து துறையினர்கள் சட்டவாளர்கள் 

இனவுணர்வாளர்கள் சமயத்தலைவர்கள் பொது மக்கள் சமயசமுக அமைப்பினர்கள் 

பொது அமைப்பினர்கள்  சமுக ஆர்வலர்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியினராகிய நாமும்   வேண்டுகோள் விடுகின்றோம்


 

ஒப்பம் 

(திரு லக்ஸ்மன்- லக்கி)

செயலாளர் நாயகத்தின் பொடுட்டு 

மாவட்ட செயலாளர்

ஈரோஸ் ஜனநாயக முன்னணி 

மட்டக்களப்பு 

26.07.2023







Post a Comment

0 Comments